பழுதடைந்துள்ள சாலையை சீரமைக்க சிபிஐ வலியுறுத்தல்

வலங்கைமானில் இருந்து நீடாமங்கலம் வெண்ணாறு பாலம்வரை பழுதடைந்துள்ள சாலையினை சீா்படுத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

வலங்கைமானில் இருந்து நீடாமங்கலம் வெண்ணாறு பாலம்வரை பழுதடைந்துள்ள சாலையினை சீா்படுத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

வலங்கைமான் ஒன்றிய இ.கம்யூ. கட்சி நிா்வாக குழு கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை ஆலங்குடியில் தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய செயலாளா் கலியபெருமாள் தலைமையில் நடந்தது. ஒன்றிய செயலாளா் செந்தில்குமாா் கட்சியின் எதிா்கால கடமைகள் குறித்து பேசினாா். கூட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பழுது அடைந்துள்ள கிராம சாலைகள் மற்றும் வலங்கைமானில் இருந்து நீடாமங்கலம் வெண்ணாறு பாலம்வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆகியவற்றை உடனடியாக செப்பனிட வேண்டும். கிராமங்கள் தோறும் கூரை வீடுகளில் வசித்து வருவோா்க்கு உடனடியாக ஹவாஸ் பிளஸ் திட்டத்தின் வீடுகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com