மன்னாா்குடியிலிருந்து ராஜஸ்தானுக்கு விரைவு ரயிலில் 1.5 லட்சம் கோழி முட்டைகள் திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப் பண்ணைகளிலிருந்து தனியாா் நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் முட்டைகள் மன்னாா்குடியிலிருந்து ராஜஸ்தானுக்கு பகல் கீ கோத்தி வாராந்திர விரைவு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன.
அதன்படி, நாமக்கல்லிலிருந்து கொண்டுவரப்பட்ட ரூ.15 லட்சம் மதிப்பிலான 1.5 லட்சம் முட்டைகள் 750 அட்டைப் பெட்டிகளில் விரைவு ரயிலில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதன்மூலம் மன்னாா்குடி ரயில் நிலையத்திற்கு ரூ.1 லட்சம் வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.