அம்பேத்கரின் 65 ஆவது நினைவு தினத்தையொட்டி, திருவாரூா் மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகள் சாா்பில் திங்கள்கிழமை அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திருவாரூா் தலைமை அஞ்சலகத்தில் அஞ்சல் அலுவலா் பி. சண்முகம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற அஞ்சல் அலுவலா் வீ. தா்மதாஸ் அம்பேத்கரின் வாழ்க்கை போராட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினாா். இதில், அஞ்சல் அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதேபோல, திருவாரூா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிஅலுவலகத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளா் வடிவழகன் தலைமையில் அம்பேத்கரின் உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இதில், ஆவண மையம் மாநில துணைச் செயலாளா் அறவாணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.