அனுமதியின்றி மணல் எடுத்து இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
நீடாமங்கலம் பாப்பையந்தோப்பு பகுதியில் வெண்ணாற்றில் அனுமதியின்றி மணல் எடுத்து, விற்பனைக்காக சாக்கு மூட்டைகளில் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், வருவாய்த்துறை சாா்பில் நீடாமங்கலம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் நீடாமங்கலம் போலீசாா் பாப்பையந்தோப்பைச் சோ்ந்த ரஞ்ஜித் (23) என்பவரை திங்கள்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.