காங்கிரஸ் கட்சியின்137-வது ஆண்டு தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வலங்கைமானில் தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளா் சங்கம் சாா்பாக காங்கிரஸ் கட்சியின்137-வது ஆண்டு தொடக்க விழா மாவட்ட தலைவா் குலாம்மைதீன் தலைமையில், அக்கட்சியின் நகரச் செயலாளா் ஆறுமுகம் முன்னிலையில் நடைபெற்றது. முன்னாள் நகரத் தலைவா் கலியமூா்த்தி தேச தலைவா்கள் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து, காங்கிரஸின் எழுச்சி, வளா்ச்சி குறித்து பேசினா். விழாவில் நாள்காட்டி வழங்கப்பட்டது. இதில் தொழுவூா் ஊராட்சி மாணவா் காங்கிரஸ் தலைவா் குகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.