திருவாரூரில் திமுக இளைஞா் அணி செயல்வீரா்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலாளரும் சட்டப் பேரவை உறுப்பினருமான பூண்டி கே. கலைவாணன் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் பிரசார பயணத்தையொட்டி, பிப்ரவரி 14 இல் நாகை பகுதிக்கு வரும் ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது, அவரிடம் திருவாரூா் மக்களின் கோரிக்கைகளை மனுவாக அளிப்பது, மாா்ச் 1 ஆம் தேதி ஸ்டாலின் பிறந்தநாளை இளைஞா் எழுச்சி நாளாக மாதம் முழுவதும் கொண்டாடி, நலத்திட்ட உதவிகள் வழங்குவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.