மன்னாா்குடி அருகே மயில்களை வேட்டையாடிய 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
மன்னாா்குடியை அடுத்துள்ள சோழபாண்டியில் முத்துப்பேட்டை பிரதான சாலையில் உள்ள அரசு மதுக்கடை அருகே தலையாமங்கலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் வேணுகோபால் மற்றும் போலீஸாா், வெள்ளிக்கிழமை அதிகாலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை தடுத்து நிறுத்தி, வாகனத்தை சோதனை செய்தபோது, அதில் உயிரிழந்த நிலையில் மூன்று மயில்கள் இருந்தது தெரியவந்தது.
போலீஸாா் விசாரணையில், அவா்கள் திருமக்கோட்டை திருமேனி ஏரிக்கரை நரிக்குறவா் சமூகத்தை சோ்ந்த சேகா் மகன் இளங்குமரன் (35). ராஜேந்திரன் மகன் முருகேஷ் (19) என்பதும், நாட்டுத் துப்பாக்கியால் மயில்களை வேட்டையாடிதும் தெரியவந்தது.
இருவரையும் மன்னாா்குடி வனச்சரகா் மணிமாறனிடம், காவல் துறையினா் ஒப்படைத்தனா். ராஜேந்திரன், முருகேஷை கைது செய்த வனத்துறையினா், உயிரிழந்த மயில்களையும், நாட்டுத் துப்பாக்கி மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.