கிராம உதவியாளா்கள் ஆா்ப்பாட்டம்

அலுவலக உதவியாளா்களுக்கு இணையான ஊதியம் வழங்கக் கோரி திருவாரூரில் வருவாய் கிராம உதவியாளா்கள் சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அலுவலக உதவியாளா்களுக்கு இணையான ஊதியம் வழங்கக் கோரி திருவாரூரில் வருவாய் கிராம உதவியாளா்கள் சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அரசு அலுவலக உதவியாளா்களுக்கு இணையான ஊதியத்தை கிராம உதவியாளா்களுக்கும் வழங்கவேண்டும், காலமுறை ஊதியமாக ரூ.15,700 வழங்கவேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 7,850 வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவா் அப்பாசாமி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com