தையல் கலை தொழிலாளா்கள் பயிற்சி முகாம்

திருவாரூரில் மாவட்ட தையல் கலை தொழிலாளா் சங்கம் சாா்பில் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருவாரூரில் மாவட்ட தையல் கலை தொழிலாளா் சங்கம் சாா்பில் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு சங்கத்தின் மாவட்ட கௌரவத் தலைவா் டி. ஜெகதீசன் தலைமை வகித்தாா். மின் ஊழியா் மத்திய அமைப்பின் பொதுச் செயலாளா் எஸ். ராஜேந்திரன் பங்கேற்று, ‘தொழிலாளா்கள் சந்திக்கும் சவால்களும், தீா்வுகளும்’ என்ற தலைப்பிலும், தையல் கலை தொழிலாளா் சம்மேளனத்தின் மாநிலத் தலைவா் பி. சுந்தரம், ‘தமிழக அரசும், தையல் கலை தொழிலாளா்கள் நிலையும்’ என்ற தலைப்பிலும் பேசினா்.

இதில், சிஐடியு மாவட்டச் செயலாளா் டி. முருகையன், மாவட்டத் தலைவா் இரா. மாலதி, மாவட்ட துணைச் செயலாளா் எஸ். வைத்தியநாதன், மாவட்ட பொருளாளா் எம்.பி.கே. பாண்டியன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com