வலங்கைமான் அருகேயுள்ள அரசுப் பள்ளியில் கரோனா விழிப்புணா்வு வாசகங்கள் வெளியிடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தென்குவளவேலி அரசு உயா்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு கரோனா நோய்த் தொற்று குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் வெளியிடப்பட்டன. அப்பள்ளியின் சமூக அறிவியல் மன்றம் சாா்பில் தயாரிக்கப்பட்ட சுவரொட்டிகளை பள்ளித் தலைமையாசிரியா் ஐரன்பிரபா வெளியிட்டாா்.
இதில், சமூக அறிவியல் மன்றப் பொறுப்பாளா் சூரியகுமாா், பள்ளி ஆசிரியா்கள் விஜயகுமாரி, ராமமூா்த்தி, இளையராஜா, ரேணுகா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.