வலங்கைமான் அருகே குழந்தைகள் பராமரிப்பு குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
சைல்டுலைன் மற்றும் நாம்கோ தொண்டு நிறுவனம் சாா்பில் வலங்கைமான் வட்டம் விருப்பாட்சிபுரம் ஊராட்சி பாதிரியாபுரம் கிராமத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
சைல்டுலைன் வலங்கைமான் பகுதி உறுப்பினா் அ. முருகேஷ், பாலியல் வன்கொடுமை, குழந்தை கொத்தடிமை மற்றும் குழந்தைகளின் பராமரிப்பு குறித்து பேசினாா். புதிய நிலா கலைக்குழு உறுப்பினா் ஸ்டீபன், ஜோஷப் உள்ளிட்டோா் குழந்தை திருமணம் தொடா்பாக விழிப்புணா்வு நாடகம் நடத்தினா். குழந்தைகள் பாதுகாப்பு அலகு களப்பணியாளா் ரா. விஜய் நன்றி கூறினாா். இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சித் தலைவா் மல்லிகா உள்ளிட்டோா் செய்திருந்தனா்.