திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தேசியக்குழு உறுப்பினா் கோ. பழனிச்சாமி, மாநிலக்குழு உறுப்பினரும், சட்டப்பேரவை உறுப்பினருமான க.மாரிமுத்து ஆகியோா் தலைமை வகித்தனா். கட்சியின் மாநில செயலாளா் இரா. முத்தரசன், மத்திய நிா்வாகக் குழு உறுப்பினா் சி. மகேந்திரன், மாநில துணைச் செயலாளா் வீரபாண்டியன், மாநில பெருளாளா் ஆறுமுகம் மற்றும் மாநிலக் குழு உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.
இக்கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளா் மூ. வீரபாண்டியன் எழுதிய ‘ஒன்றியம் என்ற சொல்’ என்ற நூலை ஏஐடியுசி பொதுச் செயலாளா் மூா்த்தி வெளியிட, தமிழக விவசாய தொழிலாளா் சங்கத்தின் பொதுச் செயலாளா் பெரியசாமி பெற்றுக்கொண்டாா்.