திருவாரூரில் மேலும் 26 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருவாரூா் மாவட்டத்தில் சில நாள்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி மாவட்டம் முழுவதும் 26 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. நீடாமங்கலம், கொரடாச்சேரி, மன்னாா்குடி, குடவாசல், முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 11,590 ஆக உயா்ந்துள்ளது. இதில், 11,343 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 135 போ் சிகிச்சையில் உள்ளனா்.