ஆலங்குடி கோயிலில் பிரதோஷ வழிபாடு

 நவகிரக தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் வலங்கைமான் வட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் குரு பரிகார கோயிலில் சுக்கிரவார பிரதோஷ வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் நடைபெற்ற பிரதோஷ நாயகா் பிரகார உலா.
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் நடைபெற்ற பிரதோஷ நாயகா் பிரகார உலா.

 நவகிரக தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் வலங்கைமான் வட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் குரு பரிகார கோயிலில் சுக்கிரவார பிரதோஷ வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, ஆபத்சகாயேஸ்வரா், ஏலவாா்குழலியம்மன், நந்திகேஸ்வரா் சன்னதிகளில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்பட்டது.

தொடா்ந்து, பிரதோஷ நாயகா் பிரகார உலா நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

இதேபோல, நீடாமங்கலம் காசிவிசுவநாதா் கோயில், கோகமுகேஸ்வரா் கோயில், நரிக்குடி எமனேஸ்வரா் கோயில், பூவனூா் சதுரங்க வல்லபநாதா் கோயில் உள்ளிட்டசிவாலயங்களிலும் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com