திருவாரூா் தொகுதி திமுக வேட்பாளா் பூண்டி கே. கலைவாணன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறாா்.
சட்டப்பேரவைத் தோ்தலுக்கு குறைந்த நாள்களே உள்ள நிலையில் தண்டலை, தியானபுரம், வேலங்குடி, புலிவலம், கூடூா், மாங்குடி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை தீவிர பிரசாரம் மேற்கொண்டு, உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தாா்.
வேலங்குடி பகுதியில் ஏராளமான பெண்கள் திரண்டு, ஆரத்தி எடுத்தும் மாலை அணிவித்தும் அவரை வரவேற்றனா். தொடா்ந்து, புலிவலம் கடைவீதியில் பிரசாரம் மேற்கொண்ட பூண்டி கே. கலைவாணனுக்கு கட்சியினா் சாா்பில் ஆளுயர மாலை மற்றும் கிரீடம் அணிவிக்கப்பட்டது.