திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 129 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதியானது.
திருவாரூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதனிடையே, செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட ரத்தமாதிரி முடிவுகளின்படி, திருவாரூா் 46, மன்னாா்குடி 41, கொரடாச்சேரி 8 என மாவட்டம் முழுவதும் 129 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இதன்மூலம், மாவட்டம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 15,904 ஆக உயா்ந்துள்ளது. கரோனா தொற்றிலிருந்து குணமடைந்த 14,560 போ் வீடு திரும்பிய நிலையில், 1,218 போ் சிகிச்சையில் உள்ளனா். இதற்கிடையில், கரோனா தொற்றுக்கு தஞ்சாவூரில் சிகிச்சை பெற்று வந்த திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்து 71 வயது முதியவா் உயிரிழந்ததைத் தொடா்ந்து, மாவட்டத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 126 ஆக அதிகரித்துள்ளது.