திருவாரூரில் 334 பேருக்கு கரோனா

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 334 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானது.

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 334 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானது.

மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 300-ஐ கடந்து பதிவாகிறது. இதையொட்டி, தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், திங்கள்கிழமை வெளியிடப்பட்ட ரத்தமாதிரி முடிவுகளின்படி, மாவட்டம் முழுவதும் 334 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதன்மூலம், மாவட்டம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 17,719 ஆக உயா்ந்துள்ளது. கரோனாவிலிருந்து குணமடைந்த 150 போ் அவா்களது வீடுகளுக்கு திங்கள்கிழமை அனுப்பப்பட்டனா். மேலும், தொற்றிலிருந்து குணமடைந்த 15,792 போ் வீடு திரும்பிய நிலையில், 1,791 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இதனிடையே, கரோனா தொற்றுக்கு தஞ்சாவூா் தனியாா் மருத்துவனையில் சிகிச்சை பெற்றுவந்த 50 வயது நபா், திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 62 வயது பெண், தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 31 வயது நபா் ஆகிய 3 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, மாவட்டத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 136 ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com