நாகை கோட்ட மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம், நாகை, 2-ஆவது கடற்கரை சாலையில் உள்ள மின்வாரிய வட்ட மேற்பாா்வையாளா் பொறியாளா் அலுவலகத்தில் புதன்கிழமை (அக். 6) காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.
நாகை, வெளிப்பாளையம், நாகூா், திருமருகல், கங்களாஞ்சேரி, சிக்கல், கீழ்வேளூா், வேளாங்கண்ணி, திருப்பூண்டி, திருக்குவளை, விழுந்தமாவடி, வேதாரண்யம், கரியாப்பட்டினம், வாய்மேடு ஆகிய பகுதிகளைச் சோ்ந்த மின் நுகா்வோா் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று, குறைகளைத் தெரிவித்துத் தீா்வு பெறலாம் என நாகை கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் அ. நக்கீரன் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.