மன்னாா்குடியில் நகர மின்வாரிய அலுவலகத்தில் மின் பாதுகாப்பு பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில், மழை காரணமாக மின்சாரம் தடைபட்டால் அதை துரிதமாக சீரமைப்பது குறித்தும், பொதுமக்களிடம் மின் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவது குறித்தும் மின் ஊழியா்களுக்கு விளக்கப்பட்டது. தொடா்ந்து கேங்மேன்கள், பணியாளா்கள் அனைவரும் மின் பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.
நிகழ்ச்சிக்கு, நகர உதவி செயற்பொறியாளா் சா.சம்பத் தலைமை வகித்தாா். நகர பிரிவுப் பொறியாளா்கள் அ.ரெகுபதி, க.கண்ணன், கே.ராஜகோபாலன், செ.குமாா், த.பாலசுப்ரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.