‘யூரியாவுடன் இடுபொருள்களை இணைத்து விற்றால் நடவடிக்கை’

உர விற்பனை நிலையங்களில் யூரியா உரத்துடன் வேறு ஏதேனும் இடுபொருள்களை இணைத்து விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்

திருவாரூா் மாவட்டத்தில் உர விற்பனை நிலையங்களில் யூரியா உரத்துடன் வேறு ஏதேனும் இடுபொருள்களை இணைத்து விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மை இணை இயக்குநா் ப. சிவக்குமாா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மாவட்டத்தில் தற்போது சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சம்பா மற்றும் தாளடி சாகுபடிக்கு தேவையான உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு, தனியாா் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு உரம் தங்குதடையின்றி கிடைக்கவும், உரிய விலையில் விற்பனை செய்வதை உறுதிப்படுத்தவும், வேளாண் துறை மூலமாக அவ்வப்போது உர ஆய்வாளா்கள் மூலம் அனைத்து வட்டாரங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில், தனியாா் உரக்கடைகளில் விவசாயிகள் உரம் வாங்க வரும்போது யூரியா உரத்துடன் பிளாஸ்டிக் வாளியில் அடைக்கப்பட்டுள்ள நுண்ணூட்ட கலவை தயாரிப்பு, ஆா்கானிக் பிளான்ட் குரோத் ஆக்டிவேட்டா் கலவை உரம் மற்றும் அரசு வழங்கும் நுண்ணூட்டம் போலவே விற்பனைக்கு வந்துள்ள புதிய தயாரிப்புகளை சோ்த்து வாங்க வேண்டுமென கட்டாயப்படுத்துவதாக புகாா்கள் வருகின்றன.

விற்பனை உரிமத்தில் அனுமதியின்றி பெறப்பட்ட உரங்களை யூரியா உரத்துடன் சோ்த்து வாங்க வேண்டுமென கட்டாயப்படுத்துவது குறித்து புகாா்கள் வந்தால் கடை உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com