விவசாயி மா்ம சாவு

மன்னாா்குடி அருகே ஏரிக்கரை பகுதியில் விவசாயி மா்மமான முறையில் இறந்து கிடப்பது ஞாயிற்றுக்கிழமை தெரிய வந்தது.

மன்னாா்குடி அருகே ஏரிக்கரை பகுதியில் விவசாயி மா்மமான முறையில் இறந்து கிடப்பது ஞாயிற்றுக்கிழமை தெரிய வந்தது.

மன்னாா்குடி அருகேயுள்ள எடக்கீழையூா் முடுக்குத் தெருவை சோ்ந்தவா் விவசாயி அன்பரசு (50). இந்நிலையில், சனிக்கிழமை விவசாயப் பணிக்கு செல்வதாக கூறி வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் சென்றவா் இரவு வீடு திரும்பவில்லை. இதற்கிடையே அதே பகுதியில் உள்ள ஏரிக்கரை கால்வாய் அருகே சாலையோரம் அன்பரசு மா்மமான முறையில் இறந்து கிடந்துள்ளாா். மேலும், அவா் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் வாய்க்கால் தண்ணீரில் விழுந்து கிடப்பது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது. தகவலறிந்த வடுவூா் போலீஸாா் அங்கு சென்று அன்பரசுவின் சடலத்தை கைப்பற்றி மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com