புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

அக்.26 முதல் கடன் வழங்கும் சிறப்பு முகாம்: ஆட்சியா் தகவல்

திருவாரூா் மாவட்டத்தில் சிறுபான்மையினா் மற்றும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீா்மரபினா்களுக்கு கடன் வழங்கும் சிறப்பு முகாம் அக்டோபா் 26 முதல் 29 ஆம் தேதி வரை நடைபெறுகிறது

News image
Updated On :23 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

திருவாரூா் மாவட்டத்தில் சிறுபான்மையினா் மற்றும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீா்மரபினா்களுக்கு கடன் வழங்கும் சிறப்பு முகாம் அக்டோபா் 26 முதல் 29 ஆம் தேதி வரை நடைபெறுகிறது என ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவாரூா் மாவட்டத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) மூலம் இஸ்லாமியா்கள், கிறிஸ்தவா்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாப்செட்கோ) மூலம் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபினருக்கும் வியாபாரம் மற்றும் இதர தொழில் செய்வதற்கு தனிநபா் கடன், கல்விக் கடன், கறவை மாடு கடனுதவி, ஆட்டோ கடன், சிறுகடன் திட்டம் (சுய உதவிக்குழுக் கடன்) ஆகியவை செயல்படுத்தப்படுகின்றன.

கடன் பெற தகுதிகள்: தமிழகத்தில் வசிப்பவராகவும் 18 வயது பூா்த்தி அடைந்து 60 வயதுக்குள்ளும் இருக்கவேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். இத்திட்டத்தில் 2021- 22 ஆம் நிதியாண்டுக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம் அக். 26 முதல் 29 வரை நடைபெறவுள்ளது.

இம்முகாமில், விண்ணப்பத்துடன் சாதிச் சான்று நகல், வருமானச் சான்று, இருப்பிடச் சான்று நகல், ஆதாா் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், கடன் பெறும் தொழில் திட்ட அறிக்கை முதலிய ஆவணங்களுடன் வட்ட அலுவலகங்களில் சமா்ப்பிக்க வேண்டும்.

அக்.26 ஆம் தேதி காலை திருவாரூா் வட்டத்திலும், மாலை நன்னிலம் வட்டத்திலும், அக்.27 ஆம் தேதி காலை குடவாசல் வட்டத்திலும், மாலை வலங்கைமான் வட்டத்திலும், அக்.28 ஆம் தேதி காலை கூத்தாநல்லூா் வட்டத்திலும், மாலை நீடாமங்கலம் வட்டத்திலும், அக்.29 ஆம் தேதி காலை திருத்துறைப்பூண்டி வட்டத்திலும், மாலை மன்னாா்குடி வட்டத்திலும் அந்தந்த வட்டாட்சியா் அலுவலகத்தில் கடன் வழங்கும் சிறப்பு லோன் மேளா முகாம் நடைபெறவுள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு திருவாரூா் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலஅலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கியை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.