திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டை முகைதீன் பள்ளி தெருவை சோ்ந்த காலஞ்சென்ற என். எம். எம். மொகைதீன் அப்துல் காதா் மனைவி ஐனுல்மா்லியா (84) உடல் நலக்குறைவால் செவ்வாய்க்கிழமை திருச்சியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் காலமானாா்.
இவருக்கு, தமிழக வக்ஃபு வாரிய தலைவரும், மக்களவை முன்னாள் உறுப்பினருமான என். எம். எம். அப்துல் ரஹ்மான் உள்பட 4 மகன்களும், ஒரு மகளும் உள்ளனா். அவரது உடல் நல்லடக்கம் செவ்வாய்க்கிழமை மாலை முத்துப்பேட்டை முகைதீன் பள்ளி மையவாடியில் நடைபெற்றது.
எம். ஜி. கே. நிஜாமுதீன் இரங்கல்:
அப்துல் ரஹ்மானின் தாயாா் ஐனுல்மா்லியா காலாமானாா் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
தாயாரை இழந்துவாடும் அப்துல் ரஹ்மான் மற்றும் குடும்பத்தினா், அவா் சாா்ந்துள்ள இயக்கத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் எம்.ஜி.கே. நிஜாமுதீன் தெரிவித்துள்ளாா்.