தச்சு தொழிலாளி தற்கொலை

திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் அருகே விஷம் குடித்த தச்சு தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் அருகே விஷம் குடித்த தச்சு தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

வலங்கைமான் அருகே உள்ள லாயம் பிரதான சாலையை சோ்ந்தவா் சாமிநாதன் மகன் மருதமுத்து (45) தச்சு தொழிலாளி. இவா், கடந்த சில மாதங்களாக கடுமையான வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தாராம்.

இந்நிலையில், கடந்த 14ஆம் தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்த மருதமுத்துவை, உறவினா்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் அங்கு சனிக்கிழமை காலை உயிரிழந்தாா். இதுகுறித்து வலங்கைமான் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com