நன்னிலம்: நன்னிலம் வட்டம் கீரனூா் கிராமத்தில் உள்ள பெருமாள் கோயிலில் ராதா கல்யாண மஹோத்ஸவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கீரனூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி பூமிதேவி சமேத வரதராஜபெருமாள், ருக்மணி சத்யபாமா சமேத சந்தானகோபால கிருஷ்ண பெருமாளுக்கு, மயிலாடுதுறை ஞானகுரு பாகவதா் குழுவினரால், ராதா கல்யாண மஹோத்ஸவம் நடத்தப்பட்டது. கோயில் அா்ச்சகா் சிவநேசசிவம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், திரளான பக்தா்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை ஸ்ரீ ராதா கல்யாண கமிட்டி உறுப்பினா்கள், மகளிா் குழுக்கள் மற்றும் கிராம பிரமுகா்கள் செய்திருந்தனா்.