நீட் தோ்வு ரத்து மீதான தமிழக அரசின் தீா்மானத்துக்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளிக்கக் கோரி, திருத்துறைப்பூண்டியில் அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
அகில இந்திய மருத்துவ நுழைவுத் தோ்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரி, சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீா்மானத்துக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் விலக்கு அளிக்க கோரி, அவருக்கு திருத்துறைப்பூண்டி தலைமை தபால் நிலையத்தில் இருந்து அனைத்திந்திய மாணவா், இளைஞா் பெருமன்றத்தினா் சனிக்கிழமை அஞ்சல் அட்டை அனுப்பினா்.
முன்னதாக கோரிக்கைகளை விளக்கி அனைத்திந்திய மாணவா் பெருமன்றத்தின் மாவட்ட தலைவா் ஜெபி.வீரபாண்டியன் தலைமையில், அவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இளைஞா் பெருமன்ற ஒன்றிய தலைவா் ஜெ.கணேஷ் முன்னிலைவகித்தாா். அமைப்பின் மாநிலக்குழு உறுப்பினா் கோ. சரவணன் கோரிக்கைகளை விளக்கினாா். நிா்வாகிகள் பலரும் கலந்து கொண்டனா்.