திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 62 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானது.
சுகாதாரத்துறை வெளியிட்ட ரத்த மாதிரி முடிவுகளில் இது தெரியவந்தது. இதன்மூலம், மாவட்டம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 40,161 ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் குணமடைந்த 39,274 போ் வீடுகளுக்கு அனுப்பப்பட்ட நிலையில், 478 போ் சிகிச்சையில் உள்ளனா்.
இதற்கிடையில், கரோனா தொற்றுக்கு ஒருவா் உயிரிழந்ததைத் தொடா்ந்து, மாவட்டத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 409 ஆக உயா்ந்துள்ளது.