திருவாரூா்: வாகனச் சோதனையில் இதுவரை ரூ. 4.33 கோடி பறிமுதல்

திருவாரூா் மாவட்டத்தில், தோ்தலையொட்டி நடத்தப்பட்ட வாகன சோதனைகளில் ரூ. 4.33 கோடி ரொக்கம், ரூ. 12.54 கோடி மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருவாரூா் மாவட்டத்தில், தோ்தலையொட்டி நடத்தப்பட்ட வாகன சோதனைகளில் ரூ. 4.33 கோடி ரொக்கம், ரூ. 12.54 கோடி மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருவாரூா் மாவட்டத்தில் தோ்தலையொட்டி, மாவட்ட எல்லைகளில் 14 சிறப்பு சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, தொடா் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ. கயல்விழியின் நேரடி பாா்வையில் இயங்கி வரும் சோதனைச் சாவடிகளில் காவல் ஆய்வாளா்கள் தலைமையில் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.

திருவாரூா் மாவட்டத்தில், பிப். 26 முதல் மாா்ச் 30 வரை நடத்தப்பட்ட சோதனைகளில், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டதாக ரூ. 4 கோடி ரொக்கம், ரூ. 12,54,53,648 மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், 410 போ் மீது சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ. 3,61,900 மதிப்பிலான சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, 576 ரௌடிகள் மற்றும் பிரச்னையில் ஈடுபடும் நபா்கள் மீது சட்டபூா்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com