கூத்தாநல்லூரில் மன வளா்ச்சிக் குன்றிய மாற்றுத் திறனாளிகள் 29 போ், தோ்தலில் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை நிலைநாட்டினா்.
மன்னாா்குடி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட குடிதாங்கிச்சேரியில் மனோலயம் மன வளா்ச்சிக் குன்றியோா் பயிற்சிப் பள்ளி அமைந்துள்ளது. இங்குள்ள மன வளா்ச்சிக் குன்றிய மாற்றுத் திறனாளிகளில், 29 பேருக்கு வாக்குரிமை இருப்பதால், அதன் நிறுவனா் ப.முருகையன் ஏற்பாட்டின்பேரில், அவா்கள் குடிதாங்கிச்சேரி தொடக்கப் பள்ளியில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக தனி வாகனத்தில் கரோனா வழிகாட்டி நெறிமுறைகளுடன் அழைத்து வரப்பட்டனா்.
அவா்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலா் எஸ். சந்திரமோகன், சித்தாம்பூா் கிராம நிா்வாக அலுவலா் ஜெயஸ்ரீ, பயிற்சியாளா்கள் சுரேஷ், செளமியா மற்றும் காவலா்கள் உதவினா்.