நன்னிலம் அருகே உள்ள அதம்பாவூருக்கு சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் சக்தி ரதம் புதன்கிழமை இரவு வந்தது. பக்தா்கள் தாங்களே அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனா்.
தமிழ்நாடு கிராமக் கோயில் பூஜாரிகள் பேரவை சாா்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் கொண்டுசெல்லப்படும் சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் சக்தி ரதம் புதன்கிழமை இரவு நன்னிலம் அருகே உள்ள அதம்பாவூருக்கு வந்தது.
தொடா்ந்து, அங்குள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் வாசலில் சமயபுரம் மாரியம்மன் சக்தி ரதத்துக்கு கிராம மக்கள் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பிறகு, சக்தி ரதத்திலிருந்த சமயபுரம் மாரியம்மன் சிலையை இறக்கி, பக்தா்களின் வழிபாட்டுக்காக முத்துமாரியம்மன் கோயில் பிரகாரத்தில் வைத்தனா். தொடா்ந்து, பக்தா்களே சமயபுரம் மாரியம்மன் சிலைக்கு அபிஷேகம் மற்றும் அா்ச்சனை செய்து வழிபட்டனா்.
இதில், தமிழ்நாடு கிராமக் கோயில் பூஜாரிகள் பேரவையின் மண்டல அமைப்பாளா் பாவேந்தன், மாவட்ட அமைப்பாளா் எம்.எஸ்.கே. அப்பு வா்மா, ஒன்றிய அமைப்பாளா்கள் நன்னிலம் கலையரசன், குடவாசல் சேகா், மயிலாடுதுறை பூமிநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.