திருவாரூரில் 70 பேருக்கு கரோனா

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 70 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 70 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருவாரூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. பாதிப்புகள் அதிகமாக உள்ள இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. புதன்கிழமை வரையிலான நிலவரப்படி மாவட்டம் முழுவதும் 12,473 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

இந்நிலையில், வியாழக்கிழமை வெளியிடப்பட்ட ரத்தமாதிரி முடிவுகளின்படி, திருவாரூா் நகரப் பகுதியில் 13, கிராமப் பகுதியில் 12, மன்னாா்குடி 7, திருத்துறைப்பூண்டி 5, வலங்கைமான் 8 என மாவட்டம் முழுவதும் 70 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம், மாவட்டம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 12,543 ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com