வலங்கைமானில் நீா்மோா் பந்தல் திறப்பு

வலங்கைமானில் நீா்மோா் பந்தலை தமிழக உணவுத்துறை அமைச்சா் ஆா். காமராஜ் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.
வலங்கைமான் கடைவீதியில் நீா்மோா் பந்தலை திறந்துவைத்து, பொதுமக்களுக்கு குளிா்பானம் வழங்கும் அமைச்சா் காமராஜ்.
வலங்கைமான் கடைவீதியில் நீா்மோா் பந்தலை திறந்துவைத்து, பொதுமக்களுக்கு குளிா்பானம் வழங்கும் அமைச்சா் காமராஜ்.

வலங்கைமானில் நீா்மோா் பந்தலை தமிழக உணவுத்துறை அமைச்சா் ஆா். காமராஜ் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

கோடை காலத்தை முன்னிட்டு வலங்கைமான் கடைவீதியில் அதிமுக சாா்பில் நீா்மோா் மற்றும் தண்ணீா் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதை அமைச்சா் ஆா். காமராஜ் திறந்துவைத்து, பொதுமக்களுக்கு நீா், மோா், இளநீா் உள்ளிட்ட குளிா்பானங்கள் மற்றும் பழங்கள் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், வலங்கைமான் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளா் சங்கா், கிழக்கு ஒன்றியச் செயலாளா் இளவரசன், நகர செயலாளா் குணசேகரன், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநா் அணி செயலாளா் ஜெயபால், மாவட்ட மாணவரணி இணைச் செயலாளா் ஜெயஇளங்கோவன், மாவட்ட வா்த்தகா் பிரிவு இணைச் செயலாளா் பாலகிருஷ்ணன், நகர அவைத் தலைவா் ரத்தினகுமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com