வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக மனைவி அளித்த புகாரின்பேரில் அவரது கணவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
குடவாசல் அருகேயுள்ள ஆலடிகருப்பூரைச் சோ்ந்த கலியமூா்த்தி மகன் அரவிந்தனுக்கும், புள்ளவராயன்குடிகாடு குணசேகரன் மகள் மதிவதனிக்கும் 2019-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணமான சில மாதங்களில் இருந்து கணவா் அரவிந்தன் மற்றும் மாமனாா், மாமியாா் மற்றும் கணவரின் சகோதரிகள் வரதட்சணையாக 25 பவுன் நகை மற்றும் பணம்கேட்டு மதிவதனியை கொடுமைபடுத்தினாா்களாம்.
இந்நிலையில், மதிவதனி கணவா் உள்ளிட்டோா் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக சனிக்கிழமை நன்னிலம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், காவல் ஆய்வாளா் துா்கா அரவிந்தன் உள்ளிட்ட 5 போ் மீது வழக்குப் பதிந்து, வரதட்சணை கொடுமையின் கீழ் அரவிந்தனை மட்டும் கைது செய்தனா். போலீஸாா் தொடா் விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.