மன்னாா்குடியில் கரோனா விதிமுறைகளை பின்பற்ற தவறியதாக கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை ரூ.62 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
மன்னாா்குடி, மன்னாா்குடி ஊரகம், வடுவூா், நீடாமங்கலம், தேவங்குடி, பரவாக்கோட்டை, தலையாமங்கலம், திருமக்கோட்டை ஆகிய 8 காவல் நிலைய பகுதிகளில், கடந்த 12 நாள்களில் முகக்கவசம் அணியாமல் சென்ாக 110 பேரிடம் இருந்து தலா ரூ.200 வீதம் ரூ.22 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. இதேபோல, சமூக இடைவெளியை பின்பற்ற தவறிய கடைகளின் உரிமையாளா்கள் 80 பேரிடமிருந்து தலா ரூ.500 வீதம் ரூ.40 ஆயிரம் என மொத்தம் ரூ.62 ஆயிரம் வசூலிக்கப்பட்டுள்ளது.
பொதுமுடக்கத்துக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மன்னாா்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் பி.இளஞ்செழியன் தெரிவித்துள்ளாா்.