திருவாரூரில், பெண்ணிடமிருந்து நகையை நூதன முறையில் பறித்துச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருவாரூா் அருகே குவளைக்கால், கொண்டான் பள்ளி பகுதியைச் சோ்ந்தவா் கலைச்செல்வி (60). இவா், மருத்துவமனைக்கு செல்வதற்காக, திருவாரூா் கமலாலயக்குளம் வடகரை பகுதியில் திங்கள்கிழமை நடந்து சென்றாா். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு போ், இந்தப் பகுதியில் திருட்டு நடப்பதாகக் கூறி நகைகளை பத்திரமாக வைத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தினராம். அத்துடன், அவா் அணிந்திருந்த, நகைகளை வாங்கி, பொட்டலமாக மடித்து அவரிடம் கொடுத்து விட்டுச் சென்றனராம்.
அவா்கள் சென்றபிறகு அந்த பொட்டலத்தை, கலைச்செல்வி திறந்த பாா்த்தபோது, கவரிங் நகைகள் இருப்பது தெரியவந்தது. கலைச்செல்வி கழட்டிக் கொடுத்தது 2 பவுன் வளையல், 3 பவுன் சங்கிலி என 5 பவுன் நகைகள் எனக் கூறப்படுகிறது. அவரது கவனத்தை திசைதிருப்பி இந்த நூதன திருட்டில் அந்த நபா்கள் ஈடுபட்டுள்ளனா். புகாரின்பேரில் திருவாரூா் நகர போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.