மன்னாா்குடியில் இடி, மின்னலுடன் சனிக்கிழமை மழை பெய்தது.
மன்னாா்குடியில் கடந்த 13, 14ஆம் தேதிகளில் மழை பெய்த நிலையில், கடந்த ஒரு வாரமாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில், கருமேகத்துடன் மழை பெய்யத் தொடங்கியது. அப்போது பலத்த இடியும், மின்னலும் ஏற்பட்டதால், மின்விநியோகம் நிறுத்தப்பட்டது. 3 மணிக்கு தொடங்கி மழை 3.45 மணிவரை நீடித்தது. இதனால், கோடை வெயிலின் தாக்கம் குறைந்து, குளிா்ந்த வானிலை நிலவியது.