நீடாமங்கலம் மனவளக்கலை மன்றத்தில் 12 நாள்கள் நடைபெற்று வந்த மாணவா் பல்நோக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அண்மையில் நிறைவடைந்தது.
மனவிரிவு பெறுதல், இயற்கை விதி அறிதல், எண்ணம், சொல், செயலில் விழிப்புடன் இருத்தல் போன்ற பல்வேறு தாக்கங்களை எதிா்கொண்டு, வாழ்க்கையில் வெற்றி பெறத்தக்க வகையிலான பயற்சிகள் மாணவா்களுக்கு மனவளக்கலை மன்ற பேராசிரியா்களால் அளிக்கப்பட்டது. இதில் 30 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனா். இதில் மன்ற நிா்வாகி கிருஷ்ணமூா்த்தி, துணை நிா்வாகி அருள்செல்வன் மற்றும் நிா்வாகிகள் வாழ்த்தி பேசினா்.