மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே குடும்ப பிரச்னை காரணமாக விஷம் குடித்தவா், மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
ஓவா்சேரியை சோ்ந்தவா் மகேந்திரன் (35). இவரது மனைவி சரண்யா (30). இத்தம்பதிக்கு இரண்டு மகள் உள்ளனா். வா்ணம் பூசும் தொழிலாளரான மகேந்திரன், வெள்ளிக்கிழமை மதுபோதையில் வீட்டுக்கு வந்தாராம். அவரை மனைவி கண்டித்ததால், பூச்சிமருந்தை குடித்து மயங்கி விழுந்த அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். எனினும், மகேந்திரன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். கோட்டூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.