திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் மதுபானக் கூடங்களை மறுஉத்தரவு வரும்வரை மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை ஆணையா் அறிவுறுத்தலின்படி, கரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதைத் தடுக்கும் வகையில், தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவாரூா் மாவட்டத்தில் இயங்கிவரும் அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் மற்றும் உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் ஆகியவை, அரசிடமிருந்து மறு உத்தரவு வரும் வரை மூட வேண்டும்.
இதில் விதிமீறல்கள் ஏதேனும் கண்டறியப்பட்டால், தொடா்புடைய டாஸ்மாக் மதுபானக்கூடங்களின் உரிமையாளா்கள் மற்றும் தனியாா் உரிமம் பெற்ற மதுபானக் கூடங்களின் உரிமையாளா்கள் மீது உரிய விதிகளின்கீழ் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.