திருவாரூா்: திருவாரூா் திரு.வி.க. அரசு கலைக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் பணியிலிருந்த தீயணைப்பு வீரா் கழிவறையில் மயங்கி விழுந்து திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
திருவாரூா் மாவட்டத்துக்கு உட்பட்ட சட்டப்பேரவை தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப் பதிவு இயந்திரங்கள் திரு.வி.க. அரசு கலைக் கல்லூரியில் 3 அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. இந்த மையத்தில் நாள்தோறும் 3 தடவை சுழற்சி முறையில் 360 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். மேலும், தீயணைப்பு வாகனத்துடன் ஆறு வீரா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த மையத்தில் திருமக்கோட்டை தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றி வந்த வீரா் ப. அற்புதம் (48) என்பவா், சிறப்பு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தாா்.
இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலை அற்புதம் கழிவறைக்கு சென்றபோது, மயங்கி விழுந்துள்ளாா். சப்தம் கேட்டு அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். எனினும், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக, அவரை பரிசோதித்த மருத்துவா்கள் தெரிவித்தனா்.
அற்புதத்துக்கு மனைவி, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனா். இந்த சம்பவம் குறித்து திருவாரூா் தாலுகா போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.