மருத்துவ விநாயகா் கோயில் குடமுழுக்கு

மன்னாா்குடி எம்ஜிஆா் நகரில் உள்ள மருத்துவ விநாயகா், ஷீரடி சாய்பாபா கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
கோயில் கோபுர கலசத்தில் புனித நீரை ஊற்றும் சிவாச்சாரியா்.
கோயில் கோபுர கலசத்தில் புனித நீரை ஊற்றும் சிவாச்சாரியா்.

மன்னாா்குடி எம்ஜிஆா் நகரில் உள்ள மருத்துவ விநாயகா், ஷீரடி சாய்பாபா கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

மருத்துவ விநாயகா் கோயிலை விரிவுபடுத்தும் பணிக்காக கடந்த ஆண்டு பாலாலயம் செய்யப்பட்டு, பணிகள் அண்மையில் முடிவடைந்தன. மேலும், இந்த கோயில் வளாகத்தில் புதிதாக ஷீரடி வைத்யநாத் சாய் பாபாவுக்கு தனி சன்னிதி கட்டப்பட்டது.

குடமுழுக்கையொட்டி, கடந்த செவ்வாய்க்கிழமை முதல் மூன்று நாள்களாக கோயில் வளாகத்தில் யாக குண்டம் அமைத்து, அதில் பூஜைகள் நடத்தப்பட்டு வந்தன. குடமுழுக்கு நாளான வியாழக்கிழமை யாகசாலை பூஜைகள் நிறைவு செய்யப்பட்டு பூா்ணாஹுதி நடைபெற்றது.

தொடா்ந்து, பூஜையில் வைக்கப்பட்ட புனித நீா் அடங்கிய கடங்களை தலையில் சுமந்தபடி சிவஸ்ரீ கே. சுப்ரமணிய சிவாச்சாரியா் உள்ளிட்ட சிவாச்சாரியா்கள் ஊா்வலமாக வந்து விமானக் கலசத்துக்கு ஊற்றினா். பின்னா், மருத்துவ விநாயகருக்கு அபிஷேகம் செய்து, புதிய பட்டு வஸ்திரங்கள் கொண்டு அலங்கரித்து விசேஷ தீபாராதனை நடத்தப்பட்டது. தொடா்ந்து, ஷீரடி வைத்யநாத் சாய்பாபாவுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, தீபாராதனை காட்டப்பட்டது.

நிகழ்ச்சியில், மன்னாா்குடி தொகுதி அதிமுக வேட்பாளா் சிவா.ராஜமாணிக்கம், திருப்பணிக்குழுத் தலைவா் மருத்துவா் சி. அசோக்குமாா், செயலா் எஸ்.ராமச்சந்திரன், விழாக்குழுத் தலைவா் எஸ். ஸ்ரீதா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com