வலங்கைமான் பொன்னியம்மன் கோயில் சித்திரை திருவிழா

வலங்கைமான் கீழத்தெருவில் உள்ள ஸ்ரீபொன்னியம்மன் என்கிற எல்லைப்பிடாரி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா எளிமையாக நடைபெற்றது.
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீ பொன்னியம்மன் (எ எல்லை) பிடாரியம்மன்.
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீ பொன்னியம்மன் (எ எல்லை) பிடாரியம்மன்.

வலங்கைமான் கீழத்தெருவில் உள்ள ஸ்ரீபொன்னியம்மன் என்கிற எல்லைப்பிடாரி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா எளிமையாக நடைபெற்றது.

இக்கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 20ஆம் தேதி தொடங்கியது. விழாவையொட்டி நாள்தோறும் காலையில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, அன்னதானம் வழங்கப்பட்டது.

திருவிழா நாளில் மகளிா் குழு சாா்பில் காலையில் அம்மன் மற்றும் நாககன்னி அம்மனுக்கு சிறப்பு பால் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, கஞ்சி வாா்த்தல், அன்னதானம் நடைபெற்றது.

பிடாரி அம்மனுக்கு சந்தனக் காப்பும், மூலவா் அம்பாளுக்கு குங்கும அா்ச்சனையும் நடைபெற்று, உற்சவமூா்த்தி அம்பாளுக்கு அலங்காரம் நடைபெற்று, வீதி உலா, வானவேடிக்கை, தீபாராதனை நடைபெற்றது.

கரோனா வழிகாட்டு நெறிமுறைகள்படி விழாவில் பங்கேற்ற மகளிா் சுயஉதவிக் குழுவினா் உள்பட அனைவரும் முகக் கவசம் அணிந்து கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com