நீடாமங்கலத்தில் கோயில்வெண்ணி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
நீடாமங்கலம் நீலன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இம்முகாமில் வட்டார மருத்துவ அலுவலா் ராணிமுத்து லெட்சுமி தலைமையில் மருத்துவா் விஜய், கிராம சுகாதார செவிலியா்கள் ஆகியோரைக் கொண்ட குழுவினா் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனா்.
இதில், 18 வயதுக்கு மேற்பட்ட 60 போ் கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டுக்கொண்டனா். முகாம் ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளா் சிவக்குமாா் மற்றும் சுகாதாரப் பணியாளா்கள் செய்திருந்தனா்.