கரோனா மூன்றாவது அலை விழிப்புணா்வு
By DIN | Published On : 04th August 2021 09:26 AM | Last Updated : 04th August 2021 09:26 AM | அ+அ அ- |

திருத்துறைப்பூண்டி நகராட்சி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் கரோனா மூன்றாவது அலை குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையா் (பொ) செங்குட்டுவன் தலைமை வகித்தாா்.
ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலா் கௌரி கரோனா மூன்றாவது அலையின் தாக்கம் குறித்தும், அதை எப்படி தடுப்பது மற்றும் பாதிப்பிலிருந்து பாதுகாத்து கொள்வது குறித்து விளக்கிப் பேசினாா். இதில், மருத்துவா் சாருமதி, நகரமைப்பு ஆய்வாளா் அருள் முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.