குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம்

திருத்துறைப்பூண்டியில் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருத்துறைப்பூண்டியில் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, ஒன்றியக்குழு தலைவா் அ. பாஸ்கா் தலைமை வகித்துப் பேசும்போது, இந்த ஒன்றியத்துக்குள்பட்ட 32 ஊராட்சிகளிலும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து கிராம அளவிலான கூட்டம் நடத்த வேண்டும் என வலியுறுத்தினாா்.

இக்கூட்டத்தில், வட்டார வளா்ச்சி அலுவலா் சுப்பிரமணியன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் சங்கீதா மணிமாறன், அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் சா்மிளா, வருவாய் ஆய்வாளா் தேவகி, தொழிலாளா் நல உதவி ஆய்வாளா் கதிரவன், ஊராட்சித் தலைவா்கள், மகளிா் சுய உதவிக்குழுவினா், பாரதமாதா தொண்டு நிறுவன பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com