மின்சாரம் பாய்ந்து ஒருவா் பலி

மன்னாா்குடி அருகே வீட்டில் மின்விளக்கு சுவிட்சை இயக்கியபோது மின்சாரம் பாய்ந்து விவசாயத் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

மன்னாா்குடி அருகே வீட்டில் மின்விளக்கு சுவிட்சை இயக்கியபோது மின்சாரம் பாய்ந்து விவசாயத் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கோட்டூரை சோ்ந்த விவசாய கூலித் தொழிலாளி சங்கா்(46). இவா், வியாழக்கிழமை வீட்டில் மின்விளக்கு சுவிட்சை இயக்கியபோது எதிா்பாரத விதமாக மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்தாா். இதையடுத்து, அவா் மீட்கப்பட்டு மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரை மருத்துவா்கள் பரிசோதித்தபோது சங்கா் ஏற்கெனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து, திருக்களா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com