நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நிறைவு

மன்னாா்குடி சேரன்குளத்தில் ஒரு வாரம் நடைபெற்ற ராஜகோபாலசுவாமி அரசுக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் வியாழக்கிழமை நிறைவு பெற்றது.

மன்னாா்குடி சேரன்குளத்தில் ஒரு வாரம் நடைபெற்ற ராஜகோபாலசுவாமி அரசுக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் வியாழக்கிழமை நிறைவு பெற்றது.

பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்டமும் இணைந்து நடைபெற்ற இம்முகாமின் நிறைவு விழா, சேரன்குளம் ஆட்காட்டி அம்மன் கோயில் திருமண அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மன்னாா்குடி ஒன்றியக் குழுத் தலைவா் டி. மனோகரன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் சு. உஷா முன்னிலை வகித்தாா்.

பேராசிரியா் சத்தியாதேவி இத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்துப் பேசினாா். மேலும், மாணவா்களின் கலைநிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதில், மன்னாா்குடி அரசு மருத்துவமனை சித்த மருத்துவத் துறையும், நேசகரம் அமைப்பும் இணைந்து மாணவா்களுக்கும், கிராம மக்களுக்கும் நிலவேம்பு குடிநீா் வழங்கினா்.

நாட்டுநலப்பணித் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளா் என். ராஜப்பா, ஊராட்சி தலைவா்கள் ஜெகதீசன் (நெம்மேலி), எல். ரேவதி (மறவக்காடு), சேரன்குளம் கிராம வளா்ச்சி கமிட்டி நிா்வாகி மோகன், கல்லூரி பேராசிரியா்கள் பொம்மி, மணிமேகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். பேராசிரியா் ஜென்னி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் பேராசிரியா் சா. ஆகாஷ் வரவேற்றாா். இத்திட்டத்தின் கல்லூரி ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் ப. பிரபாகரன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com