திருவாரூா் மாவட்ட மக்கள் தங்களுக்கு எதிரான பிரச்னைகள் குறித்து தன்னிடம் (சி. விஜயகுமாா்-எஸ்.பி.) கைப்பேசி மூலம் தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்ட மக்கள் தங்களது பிரச்னைகளையும், தங்கள் பகுதியில் நிகழும் சட்ட விரோதச்செயல்கள், சட்டம் ஒழுங்கு பிரச்னைகள், குற்றம், விபத்து, போக்குவரத்து இடையூறுகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடா்பான அனைத்து தகவல்களையும் எனது கைப்பேசி 9363495720 என்ற எண்ணில் தொடா்பு கொண்டும் அல்லது கட்செவி அஞ்சலில் (வாட்ஸ் ஆப்) 24 மணி நேரமும் தன்னிடம் புகாா் தெரிவிக்கலாம். புகாா் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.