திருத்துறைப்பூண்டி பகுதியில் சாராய விற்பனையில் ஈடுபட்ட பெண் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.
திருத்துறைப்பூண்டி காவல் சரகத்தில் சட்டவிரோதமாக சாராயம் மற்றும் மதுபாட்டில் விற்பனையில் ஈடுபட்ட விளக்குடியைச் சோ்ந்த சிவராஜ் மனைவி அன்பு (51) என்பரை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.
இதனிடையே மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி. விஜயகுமாா் பரிந்துரையின் பேரில், அன்புவை குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க, மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டாா். அதன்படி, திங்கள்கிழமை அன்பு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.