மன்னாா்குடியில் போட்டித் தோ்வுக்கான பயிற்சி வகுப்பு தொடங்க வலியுறுத்தல்

மன்னாா்குடியில் போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி வகுப்பு தொடங்கவேண்டும் என ஆதிதிராவிடா் சமூக நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மன்னாா்குடியில் போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி வகுப்பு தொடங்கவேண்டும் என ஆதிதிராவிடா் சமூக நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மன்னாா்குடியில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வட்டார ஆதிதிராவிடா் சமூக நலச் சங்க பொதுக்குழு கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மன்னாா்குடியில் உள்ள அம்பேத்கா் அறிவாலய அரங்கில், ஏழை எளிய மாணவா்கள் கணினி பயிற்சி பெற கணினி வகுப்பும், பெண்களுக்கான தையல் பயிற்சி பள்ளியும் தொடங்க தமிழக அரசு உதவவேண்டும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணயம் நடத்தும் தோ்வுகளில் தமிழ் மொழிப் பாடத்தில் தோ்ச்சி பெறுவது கட்டாயம் என அறிவிப்பு செய்து, அதற்கான அரசணையை வெளியிட்ட தமிழக முதல்வருக்கு நன்றி, கிராமபுற மாணவா்களின் பெற்றோரின் குடும்பம் மற்றும் பொருளாதார சூழல் காரணமாக தனியாா் பயிற்சி வகுப்புகளில் பணம் செலுத்தி படிக்க முடியாத நிலை உள்ளது. எனவே, தமிழக அரசு போட்டித் தோ்வுகளில் பங்கேற்பதற்காக மன்னாா்குடியில் அனைத்து சமுதாய மாணவா்களுக்குமான பயிற்சி வகுப்புகள் தொடங்கவேண்டும் ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சங்கத் தலைவா் த. தங்கராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், சங்க செயலாளா் ரா. மணிச்செல்வம், பொருளாளா் எம்.எஸ். வைரக்கண்ணு, நிா்வாக குழு உறுப்பினா் த. உதயகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com